வவுனியாவில் மதுபானசாலை முன்பாக இளைஞர் குழு அட்டகாசம் : ஒருவர் கைது!!

2117

இளைஞர் குழு..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அரச வங்கிக்கு அருகேயுள்ள மதுபானசாலையில் இளைஞர் குழு அட்டகாசம் மேற்கொண்டதில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களின் முச்சக்கரவண்டியினையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நின்ற நால்வர் அடங்கிய இளைஞர் குழுவினர் வீதியில் செல்பவர்களை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த சமயத்தில் அங்கிருந்த இளைஞர் குழு தப்பித்துச் சென்றுள்ளனர்.

எனினும் அவர்கள் வருகை தந்த முச்சகரவண்டியினை அவ்விடத்திலேயே விட்டு தம்பித்து சென்ற நிலையில் முச்சக்கரவண்டியினை பொலிஸார் கையகப்படுத்தி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

இந்நிலையில் இச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.