கிளிநொச்சியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்!!

1825


கிளிநொச்சியில்..



கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் இரவு வேலை முடிந்து தனது வீட்டுக்குச்சென்று கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



குறித்த நபரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று மதியமளவில் இறந்தநிலையில் பிரமந்தனாறு பிரதான கால்வாயில் இனங்கானப்பட்டதையடுத்து தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.




இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபர் 51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.