மேலும் சில பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றதா?

1473


பொருட்களின் விலை..



சீனி, உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியனவற்றின் விலைகள் உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சினி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.



வெள்ளைச் சீனி 130 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.




பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 150 முதல் 160 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதனால் சில்லறை விலை 200 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது.


உள்நாட்டு வெங்காய உற்பத்திகள் சந்தைக்கு கிடைக்கப்பெறும் காலம் என்பதனால் இந்த மாதங்களில் வெங்காயத்தின் விலை உயர்வாகக் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு உருளைக் கிழங்கின் சில்லறை விலை 200 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாகவும்,இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கின் விலை 160 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


பால், முட்டையின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை : இலங்கையில் பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் இன்று அல்லது நாளை உயரும் என துறைசார் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

திரவ பால் விலையை அதிகரிக்குமாறு விவசாய சங்கங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும், திரவ பாலின் விலையை சந்தையில் உள்ள பால் விலையுடன் ஒப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய உள்ளூர் பால் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளமையினால் மில்கோ நிறுவனம் திரவப் பாலின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.