வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி பூஜையும் ஏடு தொடக்குதலும்!!

1536

விஜயதசமி பூஜையும் ஏடு தொடக்குதலும்..

நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான இன்று விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விஜயதசமி பூஜையும், ஏடுதொடக்குதலும் சிறப்பாக இடம்பெற்றது.

கல்வி, செல்வம், வீரம் வேண்டி சரஸ்வதி, லக்சுமி, துர்க்கை ஆகிய மூன்று தேவியருக்கும் நவராத்தி பூஜை இடம்பெற்று வந்தது. அந்தவகையில் நவராத்திரி பூஜையின் இறுதி நாளான இன்று விஜயதசமி மற்றும் ஏடு தொடக்குதல் என்பன இடம்பெற்றன.

குறிப்பாக ஆலங்களில் இன்று (15.10) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பெருமளவான மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினர்.

அந்த வகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, தமிழருவி சிவகுமாரன் அவர்களினால் சிறுவர்களுக்கு ஏடு தொடக்கி வைக்கப்பட்டது.