வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் வித்தியாரம்பம்!!

1968

வித்தியாரம்பம்..

வவுனியா, குட்செட்வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தில் இன்று (15.10.2021 காலை விஜயதசமி நாளில் சிறார்களுக்கான ஏடு தொடக்குதல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் தங்கள் பெற்றோருடன் நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் வாழ்விற்கு அடித்தளமிட்டனர்.

வித்தியாரம்பத்திற்கான ஓலை சுவடிகளை தமிழ் விருட்சம் வவுனியா அமைப்பும், கொப்பி,பென்சில்களை அமரர்.குமரன் கமலாம்பிகை குடும்பமும் வழங்கியிருந்தனர்.