பேஸ்புக் உறவால் பெண் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

1684

பேஸ்புக் உறவால்..

பேஸ்புக் மூலம் பெண் ஒருவருடன் பழகி பண மோசடி செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளி நாட்டிலிருந்து டொலர் பொதி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்து சந்தேகநபரால் குறித்த பெண்ணிடம் இருந்து 129,000 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நுகேகொட பகுதியில் வைத்து 33 வயதான சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.