யாழில் 13 வயதான சிறுமி துஷ்பிரயோகம் : இளம் தம்பதியினர் கைது!!

1577


யாழில்..



யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



குறித்த சிறுமி சுகயீனமுற்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.




இதனையடுத்து, சிறுமியின் உறவினர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினாலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இளைஞரின் 25 வயதான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கைது செய்யப்பட்ட யுவதியிடமிருந்து சிறுமியின் தகாத முறையில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.