வவுனியா குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலத்தில் சுகாதார நடைமுறை குறித்து திடீர் சோதனை!!

1339

குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலத்தில்..

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு- குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் இன்று (21.10) திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அதிகளவிலான மக்கள் நிற்பதாகவும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அதிகளவிலான மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நின்றதையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளுக்கு கோவிட் அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.