வவுனியாவில் எரிபொருள் தட்டுப்பாடு!!

1309

எரிபொருள் தட்டுப்பாடு..

வவுனியாவிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சில இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டதுடன், எதிர் கட்சியினரும் எதிர்வு கூறியிருந்தனர்.

இந்நிலையிலேயே வவுனியாவில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றதாகவும், எனினும் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இலங்கையில் அதற்கேற்ப விலை அதிகரிக்கப்படாததால் அக்டோபர் மாதம் நிறைவடையும் போது ஏழாயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்து.