புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையில் வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகள்!!(படங்கள்)

372

நேற்று வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) மூத்த உறுப்பினர் அமரர் கோன் நினைவாக பல நிகழ்வுகள் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக, வவுனியா தாண்டிக்குளத்தில் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரான அமரர செல்லர் இராசதுரை (கோன்) நினைவாக லண்டனில் வசிக்கும் திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் அமைக்கபட்ட பேரூந்து தரிப்பு நிலையத்தை நேற்று (03.04) காலை 10 மணிக்கு புளொட் அமைப்பின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய யாழ் மாவட்ட வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திறந்து வைத்தார்.

அவருடன் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், பிறமண்டு வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.மஞ்சுளா திருவருள்நேசன் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) பல சிரேஷ்ட உறுப்பினர்களின் முன்னிலையில் இவ் திறப்பு விழா நடைபெற்றது.

இவ் திறப்பு விழாவில் அமரர்செல்லர் இராசதுரை (கோன்) அவர்களின் சகோதரி மகேஸ்வரி மைத்துனர் தர்மகுலசிங்கம் வவுனியா பிறமண்டு வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது நிகழ்வாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரினால் துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு செய்யபட்டது. இவ் துவிச்சக்கர வண்டியினை பொன்னாவரசன்குளத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் வைஷ்ணவி அவர்கள் பெற்று கொண்டார்.

விழாவின் விருந்தினர்கள் பாடசாலைக்கு பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களினால் மாலைகள் அணிவிக்கபட்டு பிரதான மண்டபத்திற்கு அழைத்து செல்லபட்டனர். லண்டனில் வசிக்கும் திரு.தர்மலிங்கம் நாகராஜாஅவர்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கபட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாடசாலை வலைப்பந்தாட்ட அணிக்குரிய சீருடைகள், கூடைப்பந்தாட்ட அணிக்குரிய சீருடைகள் என்பன வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி திருவருள்நேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய யாழ் மாவட்ட வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தரும்,வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டனர்

கௌரவ விருந்தினர்களாக வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் முறைசாரா பிரிவு ஆலோசகர் திரு கே.திருவருள்நேசன், கல்வி மேம்பாட்டு ஆலோசகர் திருமதி யு.சுஜாத்தா, தொழில் ஆலோசகர் திருமதி கிறேனியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7