இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது : சீனாவிற்கு அறிவித்த மகிந்த ராஜபக்ஷ!!

630

கிந்த ராஜபக்ச..

கொழும்பு துறைமுகத்திற்கு சீன கப்பலில் கொண்டுவரப்பட்ட பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீனத் தூதுவர் வீ. ஷெங் ஹோங்கிற்கு அறிவித்துள்ளார். சீனத் தூதுவர் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளதாக தெரியவருகிறது.

நாடு கோரியுள்ள அளவுகோலுக்கு அமைவாக வழங்கப்படும் பசளைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடக நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.