நேருக்கு நேர் மோதிய இரு முச்சக்கரவண்டிகள் : மூவர் வைத்தியசாலையில்!!

778

விபத்து..

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இன்று காலை இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு சென்ற முச்சக்கரவண்டியொன்றும், ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.