வவுனியாவில் 30 வயது நபர் ஒருவர் அதிரடியாக கைது!!

2052

மூன்று முறிப்பு பகுதியில்..

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கேரள கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து நேற்றையதினம் (30.10.2021) குறித்த பகுதியில் தேடுதல் நடாத்திய போது,

வீடொன்றிலிருந்து 3 கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளனர். அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.