முதல் நாளிலேயே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட ரயில்கள்!!

1179

மோதிக்கொண்ட ரயில்கள்..

ராகம மற்றும் பெரலந்த ஆகிய இடங்களுக்கு இடையிலான ரயில் கடவையில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. எனினும் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதான ரயில் மாா்க்கத்தின் தெமட்டகொட- பல்லேவெல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான கடவையில் சமிஞ்சை பிரச்சினை காரணமாக ரயில் சேவைகளில் இன்று காலை தாமதம் ஏற்பட்டது.

கோவிட் காரணமாக சுமாா் 6 மாதங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை இன்றே ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.