விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான முன்னாள் அழகியும் தோழியும்!!

1148

விபத்தில்…

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி முன்னாள் கேரள அழகியும் அவரது தோழியும் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர். இதே அழகி போட்டியில் இரண்டாவது இடத்திற்கு வந்தவர் அஞ்சனா ஷாஜன். இவர்கள் இருவருமே எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் வாகன விபத்தில் சிக்கியுள்ளனர்.

இருசக்கர வாகனம் ஒன்றுடன் மோதாமலிருக்க, இவர்கள் சென்ற வாகனத்தை திடீரென்று திருப்ப, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் அன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் ஆகியோர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

நால்வர் பயணித்த அந்த வாகனத்தில், எஞ்சிய இருவரில் மிகவும் ஆபத்தான நிலையில் ஒருவர் இருப்பதாகவும், இருவரையும் எர்ணாகுளம் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கேயே பலியான இருவரது சடலங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.