ஆபத்தை மறந்து மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் பெருமளவான மக்கள்!!

1174

சுற்றுலா பகுதிகளில்..

இலங்கையில் பல மாதங்களாக அமுலில் இருந்த மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய சந்திரிகா குளம் உள்ளிட்ட பல சுற்றுலா பகுதிகளில் மக்கள் பெருமளவானோர் ஒன்றுகூடி வருகின்றனர்.

இவர்களில் எவரும் சுகாதார விதிமுறைகள் எதனையும் பின்பற்றாமல், நடந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார விதிமுறைகளை மீறி நடப்பதால் எதிர்காலத்தில் மற்றுமொரு,

கோவிட் அலை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கை விடுக்கப்படும் போதும் இவை எதனையும் கருத்தில் கொள்ளாது பெரும்பாலானோர் மோசமாக செயற்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

எனவே பொதுமக்கள் சுகாதார தரப்பினரின் எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு நாட்டை மற்றுமொரு கோவிட் கொத்தணி ஆபத்திற்குள் தள்ளாமல் நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.