வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளிலும் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!

1564

ஆர்ப்பாட்டம்..

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு முன்னால் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டமானது கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று (03.11) மதியம் இறம்பைக்குளம் மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் சிறீராமபுரம் திருஞான சம்பந்தர் வித்தியாலயம் , தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம் , பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி என்பவற்றில் முன்பாகவும் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டோர் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து வை, இலவசக் கல்வியை வியாபாரமாக்காதே, கொத்தலாவ சட்டமூலத்தை நிறுத்து,

சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்து, இலவசக கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்கு உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டங்களில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.