வவுனியாவில் நடைபெற்ற வயல்விழா!!

289

Va1

வவுனியா விவசாய விரிவாக்கல் பிரிவினால் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தம் வகையில் வயல்விழா இடம்பெற்றது.

வவுனியா முருகனூரில் அமைந்துள்ள விவசாய பண்ணையில் விவசாய விரிவாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட விவசாயிகள், கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் வெப்பமான காலநிலையில் விவசாயத்தை மேற்கொள்ளும் நுட்பங்கள் இயற்கை, பசளையிடல் முறைகள் உட்பட விவசாய தொழில்நுட்பங்கள் தொடர்பில் தெரிந்து கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண விவசாய பணிப்பாளர், வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண பணிப்பாளர் அ.சகிலாபானு உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.