வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று!!!

1537


கொரோனா..



வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,



வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு (03.11) வெளியாகின.




அதில் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயதுடைய இரு சிறுவர்களுக்கும், பரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது சிறுவன் ஒருவருக்கும் என 4 சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து தொற்றாளர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.