வவுனியா நகரில் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

1811

வங்கி ஊழியர்கள்..

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினை சார்ந்த வவுனியா தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியா ஏ9 வீதி புட்சிட்டிக்கு முன்பாக இன்று (05.11.2021) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கையினை உடனடியாக கைச்சாத்திடுக, அத்தியாவசிய வங்கிக்சேவைக்கு கூட்டு உடன்படிக்கைகள் தேவையில்லையா? ஆகிய இரு வாசகங்களை தாங்கிய தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் 30 நிமிடங்கள் இடம்பெற்றிருந்ததுடன் வவுனியா மாவட்டத்தில் இயங்கும் தனியார் மற்றும் அரச வங்கிகளின் உத்தியோகத்தர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.