இலங்கை வந்த இரு இந்திய விமானப்படை விமானங்கள் : காரணம் என்ன?

815


இந்திய விமானப்படை விமானங்கள்..



இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சரக்கு விமானங்கள் நேற்று முன்தினம் அதிகாலை நேனோ நைட்ரஜன் பசளை தொகையை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளன.



இதனடிப்படையில், ஒரு லட்சம் கிலோ கிராம் நேனோ நைட்ரஜன் பசளை ஏற்றிய இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.




சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் இலங்கை விவசாயிகளுக்கு துரிதமாக நேனோ நைட்ரஜன் பசளை வழங்குவதற்காகவும் இந்த இந்திய விமானங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இந்திய விமானப்படை விமானங்களை இலங்கை விமானப்படையின் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ வரவேற்றார். அத்துடன் இந்திய விமானப்படை அத்தியவசியமான நேரத்தில் வழங்கி வரும் உடனடியான உதவிகளுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.