வவுனியாவில் மீள திறக்கபடும் பாடசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

1437


பாடசாலை..



வவுனியாவில் மீள திறக்கப்படும் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் மற்றும் சுத்தம் செய்யும் செயற்பாடுகள் இன்று (07.11) முன்னெடுக்கப்பட்டன.



கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் மூன்றாம் கட்டமாக தரம் 10, தரம் 11 மற்றும் உயர்தரம் ஆகிய மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை நாளை (08.11) முதல் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.




அதற்கமைய, வவுனியா மாவட்டத்தில் உள்ள தரம் 10, தரம் 11 மற்றும் உயர்தர வகுப்புக்களையுடைய பாடசாலைகளில் பாடசாலை சமூகத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் மற்றும் பாடசாலை சூழலை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.


அந்தவகையில், வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு அல் – இக்பால் மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், அப்பகுதி அரச உத்தியோகத்தர்கள்,

மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் பாடசாலை சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன், மாணவர்களின் மேசை, கதிரைகள், வகுப்பறை கட்டடங்கள் என்பனவும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப தயார்படுத்தப்பட்டன.