இங்கிலாந்தில் பீட்சாக்ளுக்கு இலவசமாக வழங்கப்படும் பால்கட்டி மற்றும் சோஸ் போன்றவைகளுக்கு தனியாக தொகை விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்திரவிட்டுள்ளது.
இங்கிலாந்த் மக்களிடம் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாய் பீட்சா இருப்பதால் மக்கள் மிகவும் குண்டாகின்றனர் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இதற்கு காரணம் பீட்சாவுடன் இலவசமாக வழங்கப்படும் பால்கட்டி மற்றும் சோஸ் போன்றவை தான் காரணம், மக்கள் கேட்கும் போதெல்லாம் ஹோட்டலில் கூடுதலாக வழங்கப்படுகிறது.
எனவே மக்களின் நலன் கருதி, உடல்பருமனில் இருந்து அவர்களை காப்பாற்றும் நோக்கில் இனி பீட்சாவுடன் வழங்கும் இலவச சோஸ் மற்றும் கூடுதல் பால்கட்டிற்கு தனி தொகையினை ஹோட்டல்கள் அறவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
எனினும் இதற்கு, ஹோட்டல் நிறுவனர்கள் மற்றும் மக்களால் தற்போது வரை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.