உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு இதயமானது உடலுக்கு வெளியே உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் சல்டன் அரசு மருத்துவமனையில் பிரியங்கா (24), பால் (30) தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இக்குழந்தைக்கு இதயமானது மார்பக பகுதிக்கு வெளியே காணப்படுகின்றது. இக்குழந்தையை காப்பாற்ற உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் ஆனால், அதற்கு பணம் அதிகளவு செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இத்தம்பதியினருக்கு இது முதல் குழந்தை என்பதால் கவலையில் மூழ்கியுள்ளனர்.





