மூன்று வேளையும் செங்கற்கள் உண்ணும் வினோத மனிதர்!! (படங்கள்,வீடியோ)

421

கர்நாடக மாநிலத்தில் வாலிபர் ஒருவர் மூன்று வேளையும் செங்கற் கற்களையே உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹூனா கண்டி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரப்பா (30) தனது உணவாக தினமும் 3 கிலோ செங்கற்கள், மற்றும் சுவர் சுண்ணாம்புகரை கட்டிகளை உண்கிறார்.

தனது பத்து வயதில் முதல் இந்த உணவுக்கு அடிமையாகிவிட்ட இவருக்கு சாப்பிடக்கூடாத இந்த பொருட்களில் அவருக்கு ஒரு தனி சுவை கிடைத்ததால் தினமும் இதையே உணவாக உட்கொள்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 20 வருடங்களாக பாறைகள், செங்கற்கள் என்று சாப்பிட்டு வருகிறேன். நான் இதை விரும்பி சாப்பிடுகிறேன், இது எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டது.

மேலும் எனக்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லை. என் பற்கள் நன்றாக இருக்கின்றன என்றும் எந்த வித கடினமான கற்களையும் என்னால் கடிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

S1 S2 S3