அடுத்த சில மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள அபாயம் : சிவப்பு எச்சரிக்கை!!

2165

சிவப்பு எச்சரிக்கை..

மகா ஓயா பெருக்கெடுத்துள்ள நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களம் இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அலவ்வ, திவுலுப்பிட்டிய, பன்னல, மீரிகம, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, தங்கொட்டுவ,

ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் அபாயம் உள்ளதாக நீர்பாசன திணைக்களத்தைக் கோடிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

எனவே குறித்த பிரதேசங்களில், மகா ஓயா ஆற்றின் அருகில் வசிப்பவா்கள், தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

இதேவேளை களனி, களு கங்கை மற்றும் ஜிங் கங்கையை அண்டிய பகுதிகளில் உள்ளவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.