வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் பாதிப்பு : இயல்நிலை ஸ்தம்பிதம்!!

1905

சீரற்ற காலநிலை..

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மழையின் தாக்கம் காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளத்து நீர்மட்டமும் உயர்வடைந்து வருகின்றது. இதனால் குளங்களின் கீழ் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

அத்துடன், வவுனியா வடக்கு பகுதியில் மழை காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதடைந்துள்ளதுடன், 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்க பிரதேச செயலகம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை தொடந்தும் பெய்து வருதானால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் வீதமும் குறைவடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.