வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர்கள் இருவர் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இது பற்றி வவுனியா நெற் இணையத்திற்கு கருத்து தெரிவித்த பாடசாலை அதிபர்..
125 வருட பாடசாலை வரலாறில் கடந்த 2005ம் ஆண்டு மாணவர் ஒருவர் 9A சித்திகளைப் பெற்றிருந்தார். ஆனால் இவ் வருடம் மாணவர்கள் இருவர் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சந்திரகுமார் தேனுஷன் மற்றும் அன்பு ராஜா ஜோன் ரெனால்ட் ஆகிய இரு மாணவர்களும் 9A தரச் சித்திகளைப் பெற்றுக் கொண்டனர். மேலும் லோகேஸ்வரன் விதுஷன் 8A, B சித்திகளைப் பெற்றுக் கொண்டார்.
இவர்களை விட பல மாணவர்கள் 7A, 6A, 5A தரச் சித்திகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்த அதிபர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
வவுனியா நெற் சார்பாக நாமும் இவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்..
-பாஸ்கரன் கதீசன்-