யாழ். கைதடியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்து : பலர் படுகாயம்!!

882


விபத்து..



யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இருந்து பளை நோக்கிப் பயணித்த டொல்பின் ரக வாகனம், கைதடியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று (09.11.2021) செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.



தற்போது கன மழை பெய்துவரும் நிலையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் குடை சாய்ந்துள்ளது. வாகனத்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.




தற்போது மழை பெய்துவரும் நிலையில் வாகனங்களில் பயணிப்போர் அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.