முடக்கத்தினால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

1086

சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு..

சிறுவர்கள் சில மனநோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு சிறுவர்களுக்கு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வீடுகளுக்கு சிறுவர்களுக்கு உகந்த சூழல் ஒன்றை ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மனநிலைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது அத்தியாவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.