வவுனியா ஒமந்தை கிராம அலுவலர், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று!!

1482

கொரோனா..

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் ஒமந்தை கிராம அலுவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து இன்று (11.11) வவுனியாவில் துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கும், அவரது குடும்பத்தினர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா, ஓமந்தைப் பகுதி கிராம அலுவலர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.