வவுனியாவில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் இருவருக்கும், 8 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று!!

2476

கொரோனா..

ஆரம்பப் பிரிவுக்களுக்கான பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வவுனியா மாவட்டத்தில் இரு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கும், 8 மாணவர்களுக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து சுயமாக அவர்கள் முன்வந்து மேற்கொண்ட அன்டிஜன் மற்றும் பிசீஆர் பரிசோதனைகளின் போதே அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட இரு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர்கள் என்பதுடன் தொற்றுக்குள்ளான மாணவர்கள் வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர்.

எனவே, பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சுகாதார நடைமுளைறகளைப் முழுமையாக பின்பற்றி செயற்படுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.