வவுனியா பாவற்குளத்திலிருந்து பெரும்போக பயிர்ச்செய்கைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது!!

1353

பெரும்போக பயிர்ச்செய்கை..

வவுனியா பாவற்குளம் பெரும்போகம் பயிர்ச் செய்கைக்காக நீர் வினியோகம் நேற்று (11.11) ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி எல்.பி.ஈஸ்வரன் தலைமையில் பாவற்குளத்தில் பெரும்போக நெற் செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டது.

வருடா வருடம் பெரும்போக நெற் செய்கைக்காக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் இந்த வருடம் 4ஆயிரத்து 134 ஏக்கர் பெரும்போகம் செய்ய விவசாயிகள் எதிர்பார்த்துள்ளதாக பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் கு.இமாசலன் தெரிவித்தார்.

பிரதேச நிர்ப்பாசன பிரிவு உதவியாளர் கஜமுகதாசின் ஏற்பாட்டில், கிராம மக்களின் ஒத்துழைப்புடனும், பூஜை வழிபாட்டுடனும் சம்பிரதாய பூர்வமாக பெரும் போகத்திற்கான நீர்வினியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட விவசாயதிணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.