வவுனியா நகரசபையினரின் அதிரடி நடவடிக்கை : 5 மணி நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பிடிப்பு!!

1813

மாடுகள்..

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்து நிலையிலும் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.

நகரில் அதிகரிக்கும் வாகன நெரிசலினால் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல், விபத்துக்களை குறைக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் வவுனியா நகரசபையினால் 100 க்கு மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், கோவில்குளம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (13.11.2021) இரவு 5 மணிநேர காலப்பகுதியில் 100க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும், வேப்பங்குளம் நகரசபை வளாகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 1000ரூபா, தண்டம் 1000ரூபா, ஒர் நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.