இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சோகமான செய்தி!!

2858

வாகன இறக்குமதி..

வாகன இறக்குமதிக்கான சந்தை விரைவில் திறக்கப்படாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சின் செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என நான் நினைக்கவில்லை.

சிலர் என்னுடன் உடன்படாமல் இருக்கலாம். வாகனங்களை இறக்குமதி செய்ய இன்னும் 6 முதல் 7 மாதங்களாகும் வரை அதற்கான சந்தை திறக்கப்படாது.

இதேவேளை, வரி அறிவிடவுள்ள துறைகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

வரி விதிக்கப்படும் பல துறைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அதை வெளியிட்டால், அது அநியாயமாக இருக்கலாம். அந்த பொருட்கள் என்னவென்று கூற வேண்டாம் என நிதி அமைச்சின் செயலாளரால் எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனால் வரி அறவிடப்படும் பொருட்கள் மற்றும் அதில் இருந்து விடுவிக்கப்படும் பொருட்கள் என்ன என வெகு விரையில் அறிந்து கொள்ள முடியும் என நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.