வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் மரணம்!!

2462

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 94 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பூந்தோட்டம் பகுதியில் உள்ள மின் மாயானத்தில் தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.