சீனாவில் விடுதிகளில் அடைக்கப்பட்ட 1500 மாணவர்கள் : மீண்டும் உச்சம் பெறும் கொரோனா!!

1036

கொரோனா..

சீனாவில் மீண்டும் கோவிட் பரவலையடுத்து 1500 மாணவர்கள் விடுதிகளிலும் ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோவிட் தொற்று முதன் முதலில் சீனாவில் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கோவிட் பரவல் உச்ச நிலையில் இருந்தாலும் சீனாவில் கட்டுக்குள்ளேயே இருந்தது.

இந்தநிலையில் சீனாவின் டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமானவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சுமார் 1500 மாணவர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலும், ஹோட்டல்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு காணொளி காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கான உணவுகள் அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.