8 வயது மாணவிக்கு நேர்ந்த துயரம் : பாடசாலையில் இருந்து வெளியேற்றம்!!

3021

8 வயது மாணவிக்கு நேர்ந்த துயரம்..

தென்னிலங்கையில் தந்தைக்கு கோவிட் தொற்று என பொய்யான தகவலின் அடிப்படையில் மகளை பாடசாலையில் இருந்து வெளியேற்றிய அதிபருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

காலி லேல்வல ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் கல்வி கற்கும் 8 வயதுடைய மாணவி பாடசாலைக்கு சென்ற போது அவரது தந்தைக்கு கோவிட் தொற்று என கூறிய அதிபர் அவரை திருப்பி அனுப்பி அனுப்பியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு தந்தை ஒருவர் நேற்றைய தினம் மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.  சந்தன கொடிதுவக்கு என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரிடம் வினவியதற்கு , “எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். நான் கூலி வேலை செய்தே பிள்ளைகளை பார்த்துக் கொள்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மகளை பாடசாலைக்கு அனுப்பினேன். இதன்போது எனக்கு கோவிட் என கூறி மகளை திருப்பி அனுப்பி விட்டனர். திங்கட்கிழமை மீண்டும் மகளை பாடசாலைக்கு அனுப்பினோம். திங்கட்கிழமையும் திருப்பி அனுப்பப்பட்டார்.

போலியான தகவல் வெளியிட்டு பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்புவது தவறு. இன்று எனக்கு கூலி வேலையும் இல்லாமல் போய்விட்டது. இவ்வாறான செயல்களை செய்ய வேண்டாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவிய போது கருத்து வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.