வாகன விபத்தில் ஏழு பேர் படுகாயம்!!

1623

விபத்து..

கந்தளாய் – கொழும்பு பிரதான வீதி 87 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து சேருவில விகாரைக்கு வருகை தந்து மீண்டும் சேருவில பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பௌத்த மதகுரு உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த 7 பேரும் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.