மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதையன்றி மாற்று வழியில்லை என அறிவிப்பு!!

1299


கொரோனா..



நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



இந்த நிலைமை உக்கிரமடைந்தால் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதையன்றி மாற்று வழியெதுவும் இல்லாமல் போகும் என அவர் அறிவித்துள்ளார்.




அத்துடன் தென் மாகாணத்தில் மாத்திரமின்றி மேலும் பல மாகாணங்களிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது, இது ஏற்கனவே எம்மால் அறிவிக்கப்பட்டவொரு விடயமாகும்.


எவ்வாறிருப்பினும் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த நிலைமை சடுதியாக அதிகரிக்குமாயின் பாரதூரமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.