வவுனியா மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா தொற்று!!

1468

கொரோனா..

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் இன்று (22.11) முன்னெடுத்து துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்தச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.