அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த அரசாங்கம்!!

4244

அரசாங்க ஊழியர்களுக்கு..

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது விருப்பத்திற்கு அமைய அரச சேவையாளர்கள் 55 வயதில் ஓய்வு பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போது அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பட்டதன் காரணமாக டிசம்பர் மாதம் இறுதியில் ஓய்வுபெற இருப்பவர்கள் தற்போது குழுப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.