வாகனம் வாங்க இருப்போருக்கு சோகமான செய்தி : வாகன விலைகளில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!!

1697

வாகனம்..

இந்தியாவில் வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே,வாகன விலை உயர்வானது இலங்கையிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய லொறிகள் போன்ற வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.