நாட்டில் மரக்கறி விலை அதிகரிப்பால் மக்கள் எடுத்த முடிவு!!

2192

மரக்கறி விலை அதிகரிப்பால்..

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல் காரணமாக மக்கள் அனேகமானோர் பலாக்காய்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புஸ்ஸல்லாவ நகரில் இன்று (03.12.2021) பலாக்காய் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடித்து கொண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,பலாக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட போதும் மக்கள் அதிகளவில் பலாக்காயை கொள்வனவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.