பாகிஸ்தானில் இலங்கையரொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் : பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 100 பேர் கைது!!

1751

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானில் இலங்கையரொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் – சீல்கொட் பகுதியில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) ட்விட்டர் பதிவின் மூலம் அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இந்த சம்பவத்தால் ஒரு நாடாக பாகிஸ்தான் வெட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க தயங்க மாட்டோம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.