வவுனியா அல் – இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் தேசிய ரீதியில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் சாதனை!!

1229

அல் – இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள்..

மலேரியா ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலய 8 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சுகாதாரத் திணைக்களத்தின் மலேரியா ஒழிப்பு பிரிவினரால் தேசிய ரீதியில் மலேரியா ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் சித்திரப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

அதில் மலேரியா ஒழிப்பு தொடர்பில் சிறப்பான விழிப்புணர்களை வழங்கக் கூடிய சித்திரங்களை வரைந்த மாணவர்கள் வெற்றியாளர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

அதற்கமைய வவுனியா, சூடுவெந்தபுலவு அல் – இக்பால் மகாவித்தியாலயத்தை சேர்ந்த 8 மாணவர்களின் சித்திரங்களும் சிறந்த படைப்புக்காக தெரிவு செய்யப்பட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெற்றிபெற்ற என்.எப்.றிமாசா, எஸ்.அப்ரா, எம்.கே.எம்.இம்ராஸ், என்.எப்.ஹஸ்னா, ஏ.அசீமா, எல்.எப்.சம்கா, வி.எப்.அன்சிபா, ஏ.எம்.பகாத் ஆகிய மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத்,

சுகாதாரப் திணைக்களின் பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவைச் சேர்ந்த எஸ்.சரண்ராஜ் மற்றும் மலேரியா தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து மாணவர்களுக்கான வெற்றிச் சானிறிதழ்களை வழங்கி வைத்தனர்.