
மும்பையில் நடைபெற்ற அழகிப் போட்டியில் 2014ம் ஆண்டிற்கான இந்திய அழகி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2014ம் ஆண்டுக்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி மும்பையில் நடைபெற்றது.
இதில் டெல்லியை சேர்ந்த கோயல் ராணா (நடுவில் இருப்பவர்) இந்திய அழகு ராணியாக தேர்ந்து எடுக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டார். 2ம் இடம் பெற்ற ஜடாலேகா மல்கோத்ரா, 3ம் இடம் பெற்ற கெய்ல் டசில்வா ஆகியோர் அருகில் உள்ளனர்.




