இன்று மாலை 4 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் பிள்ளையார் கோவிலிற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் வண்டியின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளானார். மேலும் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
-வவுனியா செய்தியாளர் பாஸ்கரன் கதீசன்-