விழிப்புணர்வு செயலமர்வு..
வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று வவுனியா வைத்தியசாலையின் காசநோய் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது. காசநோய் தடுப்பு மருத்துவ நிலையத்தில் இந்நிகழ்வு இன்று (14.12) இடம்பெற்றது.
இதன்போது காசநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதனை தடுப்பதற்கான வழிவகைகள் மற்றும் காச நோய்கான மருத்துவ முறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், மக்கள் இதில் இருந்து விடுபட செயற்படும் முறை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர், வைத்தியர்கள் ஆகியோர் கருத்துரைகளை வழங்கியதுடன், தாதியர்கள், சுகாதார பரிசோதகர்கள், சுகாதரத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.