மகாவலி ஆற்றில் குதித்த இளைஞன், யுவதி!!

1502

மகாவலி ஆற்றில்..

மஹியங்கனை பாலத்தில் இருந்து ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், ஆற்றில் குதித்த நபர் நீந்தி கரைக்கு வந்துள்ளதாகவும், அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் நேற்று காலை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறி வீட்டிலிருந்து வந்துள்ளனர். யுவதி ஆற்றில் குதித்ததாகவும், அந்த நபரும் ஆற்றில் குதித்ததாகவும் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.